கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், முக்கிய இடங்களில் முகக்கவசம் அணிய தவறிய 164 பேரை அதிகாரிகள் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பினர்.
கத்தாரில் இந்த வார வானிலை நிலவரம்.!
கத்தாரில், ஒரு வாகனத்தில் டிரைவர் உட்பட நான்கு பேருக்கு மேல் செல்ல அனுமதியில்லை என உள்துறை அமைச்சகம் முன்னதாக அறிவித்திருந்தது.
உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை மீறி, செயல்பட்ட ஏழு நபர்களை அதிகாரிகள் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பினர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
லெபனானுக்கு இரண்டு கள மருத்துவமனைகளை அனுப்பி வைத்தது கத்தார்..!
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…