கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) அல் கோர் குடும்ப பூங்காவிற்கு வருவதற்கான புதிய நேரத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, வாரம் முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பூங்கா திறந்திருக்கும் என்றும், இருப்பினும் டிக்கெட் வழங்குமிடம் இரவு 8 மணிக்குள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030 ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்த கத்தார் தேர்வு.!
அல் கோர் பூங்கா ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கும், செவ்வாய்க்கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூங்காவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை 10,000ஐ எட்டும்போது பூங்காவின் நுழைவாயில் மூடப்படும் என்றும் அதன்பின், புதிய பார்வையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
கத்தார் தேசிய தினம்: வான வேடிக்கைகளை நீங்கள் எங்கு சென்று காணலாம்.?
تعلن وزارة #البلدية_والبيئة عن تعديل مواعيد زيارة #منتزه_الخور للعائلات كالتالي:
* من 8 صباحاً إلى 10 مساءً (طوال أيام الأسبوع)
* الأحد: عام للجمهور
* الثلاثاء: للنساء والأطفال
* إيقاف بيع التذاكر 8 مساءً
* إغلاق باب الدخول عند بلوغ 10 آلاف زائر
* تطبق كافة الإجراءات الاحترازية pic.twitter.com/xbPeZPTVFc— وزارة البلدية والبيئة | MME (@albaladiya) December 16, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…