கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று (08-12-2020) இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
இந்த உரையாடலில், கத்தாரில் எதிர்வரும் தேசிய தினத்தை முன்னிட்டு, அமீருக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். வாழ்த்துகளுக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த அமீர், கத்தார் தேசிய தின கொண்டாட்டங்களில் இந்திய சமூகம் உற்சாகத்துடன் பங்கு பெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
கத்தாரிலிருந்து நாடு திரும்பும் குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!
மேலும், முதலீடுகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்த இரு தலைவர்களும், இது தொடர்பான சமீபத்திய நேர்மறை நிகழ்வுகளை ஆய்வு செய்தனர்.
கத்தார் முதலீட்டு முகமை இந்தியாவில் செய்யவிருக்கும் முதலீடுகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைக்க இரு தலைவர்களும் முடிவெடுத்தனர்.
மேலும், இந்தியாவின் ஒட்டுமொத்த எரிசக்தி மதிப்பு சங்கிலியில் கத்தாரின் முதலீடுகளை ஆய்வு செய்வதற்கும் இருவரும் முடிவெடுத்தாக கத்தார் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கத்தார் அமீர், ஓமான் சுல்தானிடம் தொலைபேசி உரையாடல்.!
..@AJEnglish @alraya_n @al_watanQatar @AlArab_Qatar @alsharq_portal pic.twitter.com/ksN4zY92jm
— India in Qatar (@IndEmbDoha) December 8, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…