கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட மாத்திரைகளை கடத்த முயன்ற பயணி ஒருவரை கத்தார் சுங்கம் இன்று (26-11-2020) கைது செய்தது.
இதுகுறித்து கத்தார் சுங்கம் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற 397 Lyrica மற்றும் 46 Captagon மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
துருக்கி நாட்டிற்கு வந்தடைந்தார் கத்தார் அமீர்.!
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில், பயணி மீது நடத்தப்பட்ட
சோதனையில் இந்த தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ளது.
சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோஹா Al Bidda தெருவில் உள்ள பாதை மூன்று மாதங்களுக்கு மூடல்.!
جمارك مطار حمد الدولي تضبط مسافراً حاول تهريب كمية من الحبوب الممنوعة من نوعية (لاريكا ) و(كبتاجون)، تم العثور على الحبوب الممنوعة عند تفتيش المسافر ذاتياً، وقد بلغ إجمالي المواد المضبوطة عدد 397 قرص من نوعية لاريكا ، وعدد 46 قرص من نوعية كبتاجون#جمارك_قطر pic.twitter.com/w6087Jc9V7
— الهيئة العامة للجمارك (@Qatar_Customs) November 26, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…