கத்தாரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனுமதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை பொது சுகாதார அமைச்சகம் உயர்த்தியுள்ளது.
அதன்படி, திறந்தவெளி இடங்களில் நடைபெறும் திருமணங்களில் அதிகபட்சமாக 120 நபர்கள் கலந்து கொள்ளலாம் என்றும், உட்புறத்தில் (Indoor) நடைபெறும் திருமணங்களில் அதிகபட்சமாக 80 நபர்கள் வரை கலந்து கொள்ளலாம் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
கத்தாரில் உள்ள ஏடிஎம்களில் புழக்கத்தில் வந்த புதிய கத்தார் ரியால் நோட்டுகள்.!
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் Ehteraz பயன்பாட்டை செயல்படுத்துவது போன்ற அனைத்து COVID-19 தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை பொது சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், கத்தாரில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் COVID-19 தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியதற்கான அர்ப்பணிப்பை பாராட்டி அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது.
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…