கத்தார் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் நேற்று (22-11-2020) முதன்முறையாக குங்குமப்பூ அறுவடை செய்ய தொடங்கியுள்ளது. இதில் 25 சதவீதம் உள்ளூர் சந்தை பங்களிப்பைக் கொண்டுள்ளது.
கத்தாரின் வடக்கே உள்ள Um Lushoosh பகுதியில் அமைந்துள்ள Saffron கத்தாரில் நேற்று குங்குமப்பூ அறுவடை தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் கத்தார் chamber மற்றும் hassad உணவு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கத்தார் தொழில்துறை பகுதியில் புதிய மேம்படுத்தும் பணி தொடக்கம்.!
பொதுவாக குங்குமப்பூ போன்ற தாவரங்கள் ஈரான், மொரோக்கோ, ஆப்கானிஸ்தான், ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளில் காணப்படுவதால் கத்தாரில் முதல் குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் பண்ணையைத் திறந்து வைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று பண்ணையின் உரிமையாளர் Jaber Al Mansouri தெரிவித்துள்ளார்.
இந்த பண்ணையில் குங்குமப்பூவை வளர்ப்பதற்கு hydroponic soilless போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்துகிறது.
மேலும், உள்ளூர் சந்தைக்கு வழங்குவதற்காக உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை விரிவுபடுத்த விரும்புகிறோம் என்றும் கத்தார் சந்தை தேவைகளில் 25% பூர்த்தி செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் Jaber Al Mansouri கூறியுள்ளார்.
FIFA 2022 உலகக்கோப்பை: மாஸ் காட்டும் கத்தார்…இன்னும் இரண்டே வருடங்களில்.!
في السنوات الثلاث من الحصار ..
استطاعت #قطر أن تُقدِّم نموذجا في الإكتفاء الذاتي خاصة في الأمن الغذائي ، حتى باتت تحتل المرتبة الأولى عربيا في مؤشر الأمن الغذائي وال13 عالميا ..
اليوم تدخل مجال إنتاج الزعفران المعروف بقلة البلدان المنتجة له ، وبأسعاره الغالية .. https://t.co/mIGYXToCdG pic.twitter.com/ycuxSeM9gF— جابر الحرمي (@jaberalharmi) November 22, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…