கத்தாரில் வருகின்ற வியாழக்கிழமை (18-02-2021) அன்று வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வுத்துறை (QMD) கணித்துள்ளது.
தெற்கே காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றமே வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் தெரிவித்துள்ளது.
வடமேற்கு காற்று காரணமாக வெள்ளிக்கிழமை அன்று வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்பநிலை உயர்வு ஒரு நாள் மட்டுமே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் COVID-19 PCR பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் புதுப்பிப்பு பட்டியல்.!
மூடுபனி முதல் பனிமூட்டமான வானிலை வியாழக்கிழமை காலை வரை தொடரும் என்றும், இந்த வானிலை இரவு மற்றும் அதிகாலையில் ஏற்படும் என்றும், புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை காலை பெரும்பாலான பகுதிகளில் மூடுபனி தொடரும் என்றும் QMD குறிப்பிட்டுள்ளது.
மூடுபனி காரணமாக, கிடைமட்டத் தெரிவுநிலை 2 கிலோமீட்டருக்குக் கீழே குறையும் என்றும், சில நேரங்களில் அது இல்லாமல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு QMD வலியுறுத்தியுள்ளது.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: கத்தாரில் உள்ள இந்த சாலை தற்காலிகமாக மூடல்.!
❗️ فرص تشكل ضباب خفيف إلى ضباب حتى صباح يوم الخميس. #قطر
❗️ Chances of mist to fog formation until Thursday morning .#Qatar pic.twitter.com/qZmrpQKhR3
— أرصاد قطر (@qatarweather) February 15, 2021