கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தில் வருகின்ற நவம்பர் 21ம் தேதியன்று அவசரச் சான்றளிப்புக்காக சிறப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூதரகத்துடன் நேரலை சந்திப்பிற்கு முன்னரே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்களின் அவசர POA / PCC / அசல் சான்றிதழ் சான்றளிப்பு போன்றவற்றிற்கான கோரிக்கைகளை வாட்ஸ்அப் எண் 33059647 மூலம் நவம்பர் 18ம் தேதிக்குள் நன பின்வரும் வடிவத்தில் அனுப்ப வேண்டும்.
1. பெயர்.
2. பாஸ்போர்ட் எண்.
3. QID எண்.
4. மொபைல் எண்.
5. மின்னஞ்சல் முகவரி.
6. சேவையின் தன்மை.
7. அவசரத்தின் தன்மை.
8. ஏற்கனவே எடுக்கப்பட்ட நியமனம் தேதி.
நியமனம் உறுதிப்படுத்தல் மற்றும் தாங்கள் வரவேண்டிய நேரம் பின்னர் வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்படும் என்றும், தூதரக முகாமின் போது அனைத்து COVID-19 சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தூதரகம் தெரிவித்துள்ளது.
கத்தாரில் கோவிட்-19 இரண்டாம் அலை வருமா..? MoPH விளக்கம்.!
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…