ஒலிம்பிக் கைப்பந்து தகுதிச் சுற்று போட்டியில், இந்தியாவை வீழ்த்தியது கத்தார்…!

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை
முன்னிட்டு, ஆசிய மண்டலத்திற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் சீனாவின் ஜியாங்மென் நகரில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில், இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு மோதினர்.
முதல் ஆட்டத்தில் வலுவான கத்தார் அணியை இந்தியா எதிர்கொண்டது.
பிறகு, 25-22, 25-20, 25-23 என்ற செட் கணக்கில் போராடி இந்திய அணி தோல்வியுற்றது.

உலகத் தரவரிசை பட்டியலில் கத்தார் 33வது இடத்தை பிடித்துள்ளது. 8 அணிகள் மோதும் இப்போட்டியில் ஒரே ஒரு அணிதான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.