கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் ஒருவரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் இன்று (12-06-2020) பதிவு செய்துள்ளது. கத்தாரில் இதுவரை மொத்தம் 70 பேர் கொரோனா தொற்றுக்கு மரணமடைந்துள்ளனர்.
இன்று பதிவு செய்யப்பட்ட புதிய மரணம் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த 51 வயதுடையவர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பொது சுகாதார அமைச்சகம் இறந்த நோயாளியின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.