கொரோனா வைரஸ்; கத்தாரில் புதிய 12 வழக்குகள் பதிவு..!

கத்தார் நெருக்கடி மேலாண்மைக்கான உச்சக் குழுவின் செய்தித் தொடர்பாளர்
எச் இ லோல்வாஹ் பின்த் ரஷீத் பின் முகமது அல் காதர் (H E Lolwah bint Rashid bin Mohammed Al Khater) நேற்று (26-03-2020) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 12 புதிய வழக்குகளை அறிவித்தார். இதன் மூலம் நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 549ஆக அதிகரித்துள்ளது.

மேலும், புதிய வழக்குகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்தம் 13681 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.