கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் இருவர் பலி‌.!

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் இருவரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் இன்று (27-05-2020) பதிவு செய்துள்ளது. கத்தாரில் இதுவரை மொத்தம் 30 பேர் கொரோனா தொற்றுக்கு மரணமடைந்துள்ளனர்.

இன்று பதிவு செய்யப்பட்ட புதிய மரணங்கள் 75 மற்றும் 68 வயதுடையவர்கள் என்றும், இறந்தவர்கள் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், பொது சுகாதார அமைச்சகம் இறந்த நோயாளிகளின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.