கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் நான்கு பேரின் மரணம், 315 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 284 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் இன்று (10-08-2020) பதிவு செய்துள்ளது.
இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,13,262ஆக உள்ளது.
கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் நான்கு பேரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளது. தற்போது வரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 188ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பெய்ரூட் வெடி விபத்து; கத்தார் ஏர்வேஸ் 45 டன் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.!
கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 284 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,993ஆக உயர்ந்துள்ளது.
பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 4,106 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை 5,24,466 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.
آخر مستجدات فيروس كورونا في قطر
Latest update on Coronavirus in Qatar#سلامتك_هي_سلامتي #YourSafetyIsMySafety pic.twitter.com/tqEK9qXv9U— وزارة الصحة العامة (@MOPHQatar) August 10, 2020