கத்தார் நாட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தும் முயற்சியை Air Cargo சுங்க அதிகாரிகள் முறியடித்தனர்.
இதுகுறித்து கத்தார் சுங்கம் ட்வீட்டர் பதிவு ஒன்றில், பல்வேறு உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற புகையிலை பொருட்களை Air Cargo சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கத்தாரில் 14 புதிய வழித்தடங்களை Karwa பேருந்து சேர்த்துள்ளது.!
மேலும், அதிகாரிகள் பறிமுதல் செய்த இந்த புகையிலை பொருட்களின் மொத்த எடை 27 கிலோகிராம் என்றும் சுங்கம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
جمارك الشحن الجوي تحبط تهريب كمية من مادة التنباك الممنوعة، تم إخفاء الممنوعات بطريقة سرية داخل شحنة من المواد الغذائية المتنوعة، بلغ الوزن الإجمالي للمادة الممنوعة 27 كيلوجرام . #جمارك_قطر pic.twitter.com/WMM6q5t0Wa
— الهيئة العامة للجمارك (@Qatar_Customs) September 21, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…