குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவளித்த இந்தியரை நாடு திரும்ப கத்தார் உத்தரவு..!

Facebook post on CAA protests proves costly for Keralite doctor in Qatar

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவளித்து முகநூல் பக்கத்தில் எழுதியவரை நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது கத்தார்.

கேரளாவை சேர்ந்த டாக்டர் அஜித் ஸ்ரீதரன் என்பவர் கத்தாரில் உள்ள நஸிர் ஹெல்த் கேர் மருத்துவமனையில் எலும்பியல் துறையில் வல்லுநராக பணியாற்றி வருகிறார்.

இவர், இந்தியாவில் நடைபெறும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தவறு என்றும், அது தேவையான சட்டம் தான் என்றும் தனது முகநூல் பக்கத்தில் மலையாள மொழியில் எழுதி இருந்தார்.

ஆனால், அந்த பதிவினை படித்த யாரோ ஒரு மலையாளி நஸிர் ஹெல்த்கேர் நிர்வாகத்திடம் அதைப் பற்றி புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் டாக்டர் அஜித்திடம் விசாரணை நடத்தி இருக்கிறது. ஆனால் அவர் கூறிய விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி இந்தியாவிற்கு திரும்பி போக உத்தரவிட்டுள்ளது.