கத்தார் 2022 FIFA உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் அடுத்த மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நடைபெற இருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடைபெற இருந்த இந்த தகுதிச் சுற்று போட்டிகள் 2021ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கத்தார் ஏர்வேஸ் இந்தியாவில் ICMR-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களின் பட்டியல் வெளியீடு.!
தற்போது போட்டி எங்கெல்லாம் நடைபெற இருந்ததோ, அதே இடத்தில் அடுத்த வருடம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை FIFA மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் இணைந்து எடுத்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் இந்த மாதம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள், தேசிய, மாநில, மாவட்ட அளவிலான அனைத்து போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/
? Twitter
https://twitter.com/qatartms
? Instagram https://www.instagram.com/qatartms
? Telegram https://t.me/tamilmicsetqatar