கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறிய நான்கு பேர் கைது.!

Qatar arrests six more

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறியதற்காக நான்கு நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) நேற்று (04-04-2020) அறிவித்துள்ளது.

நாட்டின் சுகாதார அதிகாரிகள் வகுத்துள்ள நடைமுறைகளுக்கு இணங்க, அவர்கள் பின்பற்றுவதாக உறுதியளித்த வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிபந்தனைகளை மீறிய நான்கு நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட அனைவரும் கத்தார் நாட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிடத்தக்க காலகட்டத்தில், கத்தாரில் உள்ள அனைத்து பொது மக்களின் நன்மைக்காக நடைமுறைப்படுத்தப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை இக்கைது நடவடிக்கை வலுப்படுத்துகிறது.

மேலும், வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளுக்கு எதிராக செயல்படும் அனைத்து நபர்களையும் கண்காணித்து கைது செய்வதில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. ‌