சவுதி அரேபியாவில் ஹஜ் புனிதப் பயணம் இன்று (29-07-2020) முதல் துவங்குகிறது என சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி மக்களும், சவுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களும் என மொத்தம் 1000 பேருக்கு ஹஜ் புனித பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
COVID-19 தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், புனிதப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து சவுதி அரேபிய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் சவுதி குடிமக்களையும், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும் ஹஜ் பயணம் செய்ய இன்று முதல் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.