கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை தாயகம் மீட்கும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 10 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்பதாகவும், இந்த கூடுதல் விமானங்களை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகின்ற மே 29ஆம் தேதி முதல் ஜுன் 4ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாக தோஹாவிலிருந்து கூடுதல் விமானங்களின் பட்டியலை கத்தார் இந்திய தூதரகம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.
Additional list of flights from Doha for the ongoing Phase-2 from 29 May to 4 June 2020: @MEAIndia , @DrSJaishankar @HardeepSPuri , #VandeBharatMission pic.twitter.com/XoC3D3lJJb
— India in Qatar (@IndEmbDoha) May 25, 2020
இந்த விமானங்கள் டெல்லி, கண்ணூர், அகமதாபாத், கொச்சி, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், சென்னை, லக்னோ மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு பறக்கவிருக்கின்றன.
இதுவரை கத்தார் நாட்டிலிருந்து ஒன்பது விமானங்களில், 1520 பயணிகளும், 45 கைக்குழந்தைகளும் தோஹாவிலிருந்து இந்தியா புறப்பட்டு சென்றுள்ளனர் என்று கத்தார் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Source : The Peninsula Qatar