கத்தாரில், காலாவதியான உணவுப்பொருட்களுடன் மூன்று நபர்கள் கைது.!

Image Source : MOI

கத்தார் உள்துறை அமைச்சகத்தின் குற்றவியல் புலனாய்வுத் துறை, தடுப்பு பாதுகாப்புத் துறை மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து, அல் வக்ரா பகுதியில் காலாவதியான உணவுப்பொருட்களுடன் மூன்று நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அமைச்சகம் ட்விட்டர் பதிவில் கூறியதாவது, வீடு சோதனை செய்யப்பட்டு ஆய்வு செய்ததன் விளைவாக இரண்டு கடைகளில் வெவ்வேறு அளவு உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அவற்றில் சில உணவுப்பொருட்கள் காலாவதியாகிவிட்டன என்றும், சில உணவுப்பொருட்கள் காலாவதி தேதி இல்லாதவை என்றும், மேலும் மீள் நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் பல வெற்று புதிய பைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

Source : The Peninsula Qatar.