கொரோனா வைரஸ் பரவலை குறைப்பதற்கும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாகவும், குடும்பங்களைத் தவிர ஏனைய தனியார் கார்களில் பயணம் மேற்கொள்ளுபவர்களின் எண்ணிக்கையை இரண்டு நபர்களுக்குள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு உள்துறை அமைச்சகம் (MOI) வலியுறுத்தியுள்ளது.
கத்தாரில், COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வைரஸ் பரவலைத் தடுக்க அமைச்சகம் வெவ்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.