கத்தாரில் கொரோனா வைரஸ் ( COVID -19) உறுதிப்படுத்தப்பட்ட 10 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) நேற்று (21-03-2020) அறிவித்துள்ளது. கத்தாரில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 470ஆக உயர்ந்துள்ளது.
புதிய வழக்குகளில், பெரும்பாலானவை சமீபத்தில் ஐக்கிய இராச்சியம் (United Kingdom) மற்றும் சுவிஸ் கூட்டமைப்பிலிருந்து (Swiss Confederation) கத்தாருக்குள் வந்த பயணிகளுடன் தொடர்புடையவை என்றும் மேலும், 5 வழக்குகள் கத்தார் குடிமக்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்ட அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 9916 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.