கத்தாரில், காரில் அதிகமானவர்கள் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்ற செய்தி தவறானது; போக்குவரத்து துறை.!

Image Source : The Peninsula Qatar

கத்தார் நாட்டில், ஒரு காரில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல்கள் தவறானவை என்று போக்குவரத்து பொது இயக்குநரகம் கூறியுள்ளது.

அதிகமான பயணிகளுக்கு (ஒரு வாகனத்தில் அனுமதிக்கப்பட்டதை விட) QR 10,000 மதிப்புள்ள போக்குவரத்து அபராதம் குறித்து பரப்பப்படுவது சரியானது அல்ல என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்று போக்குவரத்து துறை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், போக்குவரத்து பொது இயக்குநரகம் அதன் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களை எடுக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.

Source : TPQ