கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை சார்பில், “இணையம் இணைந்த இதயங்கள்” மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (15-05-2020) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை ஒருங்கிணைந்த தமிழர் பேரவை செயலாளர் ஹாஜி முகம்மது அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதனை பேரவை துணை தலைவர் இப்ராஹிம் தொகுத்து வழங்கினார். பேரவையின் பொருளாளர் வலியுல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
IonTach Academy நிறுவனர் மன்னை சாதிக்பாட்ஷா, பேரவை தலைவர் சமீர்அஹமது, மற்றும் நிர்வாகிகள் ஜெகபர்சாதிக், குமார், ராஜா, ஹக்கிம் ஆகியோரின் மேற்ப்பார்வையில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது.
கத்தார் தாய்மண் கலை இலக்கியப் பேரவை தலைவர் சண்முகபாண்டியன் அவர்கள் இந்நிகழ்ச்சியினை ஆரம்பம் செய்தார்.
இந்நிகழ்வில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தொல்.திருமாவளவன், திரு.இயக்குனர் அமீர், காமராஜ் அறக்கட்டளையின் நிர்வாகியும், காமராஜர் அவர்களின் பேத்தியும் T.S.K.மயூரி, TVS கார்கோ & TVS குழும நிறுவனர் ஹைதர் அலி மற்றும் கத்தார் வாழ் தமிழ் அமைப்புகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காகவும், தமிழ் மக்களின் நலன் விசாரிப்பு அவரவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற எண்ணற்ற கருத்துக்கள் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.
கத்தார் நாட்டில் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் சார்பில் நடைபெறும் 'இணையம் இணைந்த இதயங்கள்'நிகழ்ச்சியில்…
Posted by Thol.Thirumavalavan on Friday, May 15, 2020
இளம்பாரதி சுல்தானா பர்வீன் அவர்களின் பகுதியில் இணையதள கோளாறு காரணமாக காணொளி மூலம் கருத்துரை அனுப்பினார். அதனை நிகழ்வில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை (கத்தார்) (zoom app) இல் நடத்திய இணையம் இணைந்த இதயங்கள்….. நிகழ்ச்சியில்…. பேசிய பொழுது….. ??
Posted by Sulthana parveen.j on Friday, May 15, 2020
இந்நிகழ்ச்சியின் இறுதியில், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை விழா ஒருங்கிணைப்பாளர் திருமதி.செந்தமிழ் செல்வி பாபு அவர்கள் நன்றி உரையாற்றினார்.
Source : ஒருங்கிணைந்த தமிழர் பேரவை கத்தார்.