கொரோனா வைரஸ் தாக்கத்தினால், எகிப்து நாட்டில் இருந்து வருபவர்களுக்கு தற்காலிக நுழைவுத் தடை விதித்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் (QNA) தெரிவித்துள்ளது.
மேலும், இது ஒரு பொது சுகாதார நடவடிக்கை என்றும் கொரோனா வைரஸ் பரவுவதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் “இந்த நடவடிக்கை தற்காலிகமானது”
என்றும் கத்தார் செய்தி நிறுவனம் (QNA) அரசு தகவல் தொடர்பு அலுவலக அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது.