கத்தார் மத்திய வங்கி (QCB) நேற்று (19-05-2020) நாட்டின் அனைத்து நிதி நிறுவனங்களுக்கான ஈத்-அல்-பித்ர் விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து நிதி நிறுவனங்கள்
(வங்கிகள், பணப் பரிமாற்றங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி, முதலீடு மற்றும் நிதி ஆலோசகர்கள்) விடுமுறை மே 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து நிதி நிறுவனங்களும் மே 31 முதல் பணிக்கு திரும்பும் என்றும், அத்துடன் ஈத்-அல்-பித்ர் விடுமுறை நாட்களில், கத்தாரிலுள்ள அனைத்து நிதி நிறுவனங்களும், அதன் கிளைகளும்
மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் கத்தார் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Source: The Peninsula Qatar