கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 560 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களை பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (17-04-2020) பதிவு செய்துள்ளது.
இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 4,663ஆக உயர்ந்துள்ளது.
இந்த புதிய சம்பவங்கள், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடையும் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியிலும் பதிவாகியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாக தெரிவித்துள்ளது.
பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 1,947 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.
மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 58,328 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.
கத்தாரில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்காக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்புடனும், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.