BREAKING : கத்தாரில் கொரோனா வைரஸிற்கு முதல் நபர் மரணம்..!

கத்தாரில், கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்கு முதல் நபர் மரணம் அடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (27-03-2020) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின், 28 புதிய உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் மற்றும் குணமடைந்த இரண்டு வழக்குகளுடன், வைரஸ் காரணமாக ஏற்பட்ட முதல் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், இறந்தவர் 57 வயதான நபர் என்றும், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸிற்கு இறந்தவர், மார்ச் 16ஆம் தேதி நோயைக் கண்டறிந்த உடனே தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் கவனிப்பு வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் குடும்பத்திற்கு சுகாதார அமைச்சகம் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.