ஆப்கானிஸ்தான் சிறை தாக்குதல்; கத்தார் கடும் கண்டனம்.!

Pic: Qatar Tribune

ஆப்கானிஸ்தானில் சிறை மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹார் மாகாணத்தில் ஜலாலாபாத் சிறை உள்ளது. இங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீர் தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்புபடையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்பிலும் நடந்த சண்டையில் பாதுகாப்படை வீரர்கள், பொதுமக்கள் என 29 பேர் பலியாயினர். 50 பேர் காயமடைந்தனர் என்பதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் கத்தார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar