கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து நேற்று புறப்பட்ட விமானம் இன்று இலங்கை வந்தடைந்தது.!

Image Credits: Srilanka Embassy in Qatar

கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து 268 இலங்கையர் குழுவுடன் நேற்று (26-05-2020) புறப்பட்ட இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் இன்று (27-05-2020) இலங்கை Bandaranaike சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக கத்தாரிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தோஹாவில் உள்ள இலங்கை தூதரகம், வெளியுறவு அமைச்சகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை ஏர்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, 275 இலங்கையர்களை ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் (UL 218) மூலம் திருப்பி அனுப்பியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Image Credits: Srilanka Embassy in Qatar

இந்த விமானம் இலங்கை நேரப்படி, இன்று அதிகாலை 5.45 மணிக்கு தரையிரங்கியுள்ளதாகவும் மேலும், இந்த இலங்கையர்கள் குழுவில், 17 விடுவிக்கப்பட்ட கைதிகள், 5 பாதுகாப்பான வீட்டுக் காவலில் வைக்கப்பட்டவர்கள் (safe house detainees), குடும்ப உறுப்பினர்களுடன் 17 கர்ப்பிணிப் பெண்கள், 19 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 206 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் கூறியுள்ளது.

Source : Srilanka Embassy in Qatar