கத்தார் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு 8 ஆக உயர்வு.!

கத்தார் நாட்டில் கொரோனா வைரஸ்
பாதிப்புக்குள்ளான புதிய வழக்கை கத்தார் சுகாதார அமைச்சகம் இன்று (03-03-2020) அறிவித்துள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி கத்தார் குடிமகன் என்றும், இவர்‌ பிப்ரவரி 27 ஆம் தேதியன்று ஈரான் நாட்டிலிருந்து கத்தாருக்கு வந்த விமானத்தில் பயணித்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நோயாளி முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு, தொற்று நோய் மையத்தில் அனுமதிக்கப்பட்டு நிலையான நிலையில் உள்ளார் என கூறப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட முதல் ஏழு வழக்குகள் அனைத்தும் நிலையான நிலையில் உள்ளதாகவும் அவர்கள் தொற்று நோய் மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.