கத்தாரில், COVID- 19 தொற்றால் பாதிக்கப்பட்ட 85 வயது மூதாட்டி குணமடைந்துள்ளார்.!

Image Credits: TPQ

கத்தார் ஹமாத் மருத்துவக் நிறுவனத்தின் (HMC) தொற்று நோய் மையத்தில் (CDC)  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கத்தார் நாட்டைச் சேர்ந்த 85 வயதுமிக்க மூதாட்டி குணமடைந்துள்ளார்.

COVID-19 இல் இருந்து குணமடைந்த நாட்டின் மிக வயதான நபர் இவர் என ஹமாத் மருத்துவ நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

இவர் கடந்த மார்ச் மாதத்தில், காய்ச்சல் மற்றும் இருமலுடன் கொரோனா தொற்று நோயாளியாக அடையாளம் காணப்பட்டு தொற்று நோய் மையத்தில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியான சிகிச்சைக்கு பின்னர், மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக HMC தெரிவித்துள்ளது.

தொற்று நோய் மையத்தின் ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து, கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்த நோயாளியை உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தனர்.