கத்தாரின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக தெரிவுநிலை குறைந்து வருவதால், மூடுபனியின் போது பாதுகாப்பை உறுதி செய்ய கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) சில ஓட்டுநர் குறிப்புகளை பட்டியலிட்டுள்ளது.
பாதுகாப்பான ஓட்டுநர் குறிப்புகள்:
- மூடுபனி விளக்குகள் (fog lights) மற்றும் குறைந்த விட்டங்களைப் (low beams) பயன்படுத்துங்கள்.
- அவசர விளக்குகள் emergency lights மற்றும் உயர் விட்டங்களை (high beams) பயன்படுத்த வேண்டாம்.
- நீங்கள் ஓட்டும் பாதையில் ஒட்டிக் கொள்ளவும்.
- பாதையை முந்திக்கொண்டு செல்லவும் மற்றும் மாற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.
- எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் முன்னால் ஏற்படக்கூடிய ஏதேனும் ஆபத்துகளைக் கவனிக்கவும்.
- உங்கள் பார்வையை அதிகரிக்க உங்கள் டிஃப்ரோஸ்டர் (defroster) மற்றும் வைப்பர் (wipers) பயன்படுத்தவும்.
- உங்கள் வாகனத்தை மெதுவாக்கி, நிபந்தனைகளுக்கு ஏற்ற வேகத்தில் ஓட்டுங்கள்.
- வாகனங்களுக்கு இடையில் அதிக தூரத்தை கடைபிடிக்கவும்.
கத்தாரில் உள்ள சவுதி தூதரகம் விரைவில் திறக்கப்படும்; சவுதி வெளியுறவு அமைச்சர்.!
மூடுபனி உருவாவதற்கான வாய்ப்புகள் வருகின்ற திங்கட்கிழமை (18-01-2021) வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக கத்தார் வானிலை ஆய்வுத்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இந்த வானிலை நிலைமை சில நேரங்களில் 2 கிலோமீட்டருக்கும் குறைவாகக் கிடைமட்டத் தெரிவுநிலையை குறைக்க வழிவகுக்கிறது என கத்தார் வானிலை ஆய்வுத்துறை கூறியுள்ளது.
இந்த மூடுபனி இரவு மற்றும் அதிகாலையில் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த வானிலை நிலைமையில், பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை வானிலை ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தோஹாவில் உள்ள அல் சைலியா மத்திய சந்தையில் ஏலம் நடத்த அனுமதி.!
❗️ Continuous observation of a decrease in the horizontal visibility to less than 2 km due to fog in the western and southern parts of the country and in some external roads.
Please be careful #Qatar pic.twitter.com/WtsOmIdGIs— أرصاد قطر (@qatarweather) January 17, 2021