கத்தார் அல் ஷீஹானியாவில் கிருமிநாசினி தெளிக்கும் பணி..!

Sanitisation campaign in Al Sheehaniya
Image Credits: Gulf-Times

கத்தார் அல் ஷீஹானியா (Al Sheehaniya)  நகராட்சியின் சேவைகள் விவகாரத் துறை, கொரோனா பரவலை தடுக்க பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

அல் ஷீஹானியா (Al Sheehaniya) மற்றும் புதிய அல் ஷீஹானியாவில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சூடானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தார் அமீர் 50 மில்லியன் ரியால் நன்கொடை.!

Image Credits: Gulf-Times

மேலும், கடைகள், சுகாதார மையங்கள், காவல் நிலையங்கள், அரசு சேவைகள் வளாகம் மற்றும் சிவில் பாதுகாப்பு அலுவலகம் போன்ற இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, அல் ஷீஹானியா (Al Sheehaniya) நகராட்சியின் சேவைகள் விவகாரத்துறை, அல் நஸ்ரானியா (Al Nasraniya) மற்றும் ஒட்டக பந்தய பகுதிகளில் கடந்த மாதம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டது.

இதையும் படிங்க: COVID-19: கத்தாரில் இன்று ‌(செப் 12) புதிதாக 236 பேர் பாதிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…