கத்தாரில் வசிக்கும் பொது மக்களின் தகவல்களை பெற EHTERAZ பயன்பாட்டிற்குத் தகவல் தேவைப்படுவதாக கூறி தவறான தொலைபேசி அழைப்புகள் வருகிறது.
கத்தாரில் மேலும் 3 சுகாதார மையங்களிலும் COVID-19 தடுப்பூசி போடும் பணி.!
இந்த தவறான தொலைபேசி அழைப்புகளுக்கு எதிராக EHTERAZ பயன்பாட்டின் மூலம் பொது சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
இது போன்ற அழைப்புகளைச் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை என்றும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொது சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கத்தாரில் கார்வா பேருந்துகளில் கட்டண வசூல் மீண்டும் தொடக்கம்.!
எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் பொது சுகாதார அமைச்சகம் மக்களின் தகவல்களை வழங்காது என்று தெரிவித்துள்ளது.
மேலும், EHTERAZ பயன்பாடு தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் தரவுகள் முழுமையான பாதுகாப்பில் உள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…