ஓமானின் மறைந்த சுல்தான் கபூஸுக்கு மரியாதை செலுத்துவதற்காக அரசு துறைசார்ந்த அலுவலகங்கள் மூன்று நாட்களுக்கு பணிநிறுத்தம். மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை நடக்கவிருந்த தேர்வுகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை அன்று மாற்றிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரபு நாடுகளில் மிக நீண்ட காலம் ஆட்சியாளரான சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் (79) அவர்கள் நேற்று இரவு காலமானார். இவர் 50 ஆண்டுகள் வரை ஆட்சி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.