கத்தாரிலிருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு தூதரகம் அறிவிப்பு.!

Sri Lanka Embassy in Qatar.

கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இன்று (31-05-2020) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பிராயணத் தடை அகற்றப்படும் போது, கத்தாரில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்கள் தங்களது பின்வரும் விவரங்களை வழங்குமாறு கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

  • முதற் பெயர்
  • வேறு பெயர்
  • பாஸ்போர்ட் எண்
  • QID எண்
  • தொலைபேசி எண்
  • மின்னஞ்சல்
  • குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை (கத்தாரில் இருந்தால்)
Image Credits: Sri Lanka Embassy in Qatar

மேலும், இந்த‌ விவரங்களை lankaembassyq70@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.