கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இன்று (31-05-2020) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பிராயணத் தடை அகற்றப்படும் போது, கத்தாரில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்கள் தங்களது பின்வரும் விவரங்களை வழங்குமாறு கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
- முதற் பெயர்
- வேறு பெயர்
- பாஸ்போர்ட் எண்
- QID எண்
- தொலைபேசி எண்
- மின்னஞ்சல்
- குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை (கத்தாரில் இருந்தால்)
மேலும், இந்த விவரங்களை lankaembassyq70@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.