கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இன்று (16-04-2020) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கத்தாரில், சமூக வலைதளங்களில் பரவிவரும் வெளியுறவு அமைச்சகத்தின் கடிதம் போலியானது என கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பு செய்துள்ளது.
மேலும், இலங்கையின் தேசிய சின்னத்துடன் வெளியிடப்படும் கத்தார் இலங்கை தூதரகத்தின் அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுமாறு, கத்தாரில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.