கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இன்று (07-02-2021) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான அனைத்து எதிர்கால பதிவுகளும் (future registrations) இன்று (07-02-2021) ஞாயிற்றுக்கிழமை முதல் ஆன்லைனில் மட்டுமே செய்யப்படும் என்பதை தோஹாவில் உள்ள இலங்கை தூதரகம் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது என கூறியுள்ளது.
கத்தார் தேசிய விளையாட்டு தினத்தில் பொது மக்களுக்கு அனுமதியில்லை.!
மேலும், தயவுசெய்து http://covid19.slembassy-qatar.com என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கவும் என்றும் தோஹாவில் உள்ள இலங்கை தூதரகம் அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.