கத்தாரில் நாளை பிற்பகல் முதல் பலத்த காற்று வீசுக்கூடும்; வானிலை ஆய்வுத்துறை.!

Strong winds from Saturday
Pic: Gulf-Times

கத்தாரில் நாளை (30-01-2021) பிற்பகல் முதல் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் குளிர் காலநிலை தொடரும் என்றும் கத்தார் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (ஜனவரி 30) பிற்பகல் முதல், வடமேற்கு காற்றினால் நாடு பாதிக்கப்படும் என்பதை வானிலை வரைபடங்கள் குறிப்பிடுகின்றன. காற்றின் வேகம் 12 முதல் 22 knots வரை இருக்கும் என்றும், சில இடங்களில் லேசான தூசியுடன் சில நேரங்களில் 25 knots வரை வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் அடுத்த 10 நாட்களில் மார்டனா தடுப்பூசி.!

குளிர்ந்த வானிலை இரவு மற்றும் அதிகாலையில் தொடரும் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 7-17 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 19-24 டிகிரி செல்சியஸ் வரை  இருக்கும் என்றும், புதிய வடமேற்கு காற்று காரணமாக அதை விட குறைவாக இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையான காலத்தில் அனைவரும் கவனமாக இருக்கவும், கடல் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், அத்துடன் அதன் உத்தியோகபூர்வ கணக்குகள் மூலம் சமீபத்திய வானிலை புதுப்பிப்புகளைப் பின்தொடரவும் வானிலை ஆய்வுத்துறை  அழைப்பு விடுத்துள்ளது.

தோஹாவில் புதிய வடிவிலான மின் கம்பங்களை அமைக்க Ashghal கையெழுத்து.!