கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறியதற்காக மேலும் 10 நபர்களளை கத்தார் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் நேற்று (24-03-2020) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட அனைவரும் கத்தார் நாட்டவர்கள் என கூறப்பட்டுள்ளது.
கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைளுக்கு எதிராக செயல்படும் அனைத்து நபர்களையும் கண்காணித்து கைது செய்வதில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.