கத்தாரில், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு.!

Screenshot from video

கத்தார் கலாச்சார மற்றும் பாரம்பரிய நிகழ்வுகள் மையம், கலாச்சார மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் (MCS)‌ மேற்பார்வையின் கீழ் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது.

இந்த பிரச்சாரத்தில், கொரோனா வைரஸ் தொற்று குறித்த அபாயங்கள் மற்றும் ஆபத்துகள் குறித்து பல்வேறு மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் வெவ்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.