கத்தாரில் Muaither சாலையில், ஆபத்தான முறையில் வாகனத்தை ஒட்டிய நபர் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நபர் சாலையில், பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அவரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஓட்டுநரை பொது வழக்கு விசாரணைக்கு மாற்றுவதோடு, அவர் வீதியில் ஏற்படுத்திய சேதத்திற்கு ஈடுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து துறை தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
Source : The Peninsula Qatar