கத்தாரின் முஷைரெப் (Musheireb) பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு ஆசிய நபர்களை, வடக்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று (09-02-2020) கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர்ருக்கு கிடைத்த தகவலின் பேரில், விசாரணை மேற்கொண்ட வடக்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பெரிய அளவிலான மதுபானங்களுடன் ஆசிய நாட்டை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.
சட்ட நடவடிக்கைகளை முடித்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொது வழக்கு விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.
இந்த தகவலை, கத்தார் உள்துறை அமைச்சகம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.