கத்தாரில் இருந்து கேரளாவிற்கு இன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது.!

Pic: Twitter/India In Qatar

கொரோனா வைரஸ் காரணமாக
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் “வந்தே பாரத்” திட்டத்தின் மூலம் கத்தாரில் இருந்து கேரளா மாநிலம் கண்ணூருக்கு இன்று (29-06-2020) ஒரு விமானம் புறப்பட்டது. இது கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 49வது விமானம் ஆகும்.

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு 177 பயணிகள் மற்றும் 5 கைக்குழந்தைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1773 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.

மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 229 குழந்தைகள் மற்றும் 8,528 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

https://twitter.com/IndEmbDoha/status/1277527369352450051?s=09