கொரோனா வைரஸ் காரணமாக
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் “வந்தே பாரத்” திட்டத்தின் மூலம் கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு இன்று (23-06-2020) மேலும் ஒரு விமானம் புறப்பட்டது. இது கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 45வது விமானம் ஆகும்.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோயமுத்தூர் விமான நிலையத்திற்கு 180 பயணிகள் மற்றும் 3 குழந்தைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1374 விமானம் புறப்பட்டு சென்றது.
மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 215 குழந்தைகள் மற்றும் 7,821 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
IX- 1374 took off from HIA for Coimbatore a short while ago with 180 passengers and 3 infants. This was the 45th flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 7821, plus 215 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/yphgzdCC0q
— India in Qatar (@IndEmbDoha) June 23, 2020