கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு 177 பயணிகளுடன் 22வது விமானம் நேற்று புறப்பட்டது.!

Pic : Twiitter/ India In Qatar

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் மீட்கும் “வந்தே பாரத்” திட்டத்தின் அடிப்படையில், கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு நேற்று (10-06-2020) 22வது விமானம் புறப்பட்டது.

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடுக்கு 177 பயணிகள் மற்றும் 12 குழந்தைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1374 விமானம் புறப்பட்டு சென்றது.

கத்தாரில் இருந்து இதுவரை நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 110 குழந்தைகள் மற்றும் 3,683 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.