VBM 4ம் கட்டம்: சவுதியில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 36 கூடுதல் விமானங்களின் பட்டியல் வெளியீடு.!

கொரோனா வைரஸ் காரணமாக
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து செல்லும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் கூடுதலாக 36 விமானங்கள் சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு செல்லவிருப்பதாக சவுதியில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்ட விமானங்களுடன் சேர்த்து தற்பொழுது கூடுதலாக அறிவிக்கப்பட்ட 36 விமானங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்லவிருக்கின்றன.

VBM 4ம் கட்டம்: கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் ‌17 கூடுதல் விமானங்களின் பட்டியல் வெளியீடு.!

இந்த கூடுதல் விமானங்களில் இரண்டு விமானங்கள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு
விமானங்களும் தமிழகத்தில் உள்ள
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு
இயக்கப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.