கத்தாரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இன்று மேலும் ஒரு புறப்பட்டது.!

Pic: Twitter/India In Qatar

கொரோனா வைரஸ் காரணமாக
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் “வந்தே பாரத்” திட்டத்தின் மூலம் கத்தாரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இன்று (19-06-2020) மேலும் ஒரு விமானம் புறப்பட்டது. இது கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 40வது விமானம் ஆகும்.

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு 177 பயணிகள் மற்றும் 4 குழந்தைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1576 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.

மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 193 குழந்தைகள் மற்றும் 6,870 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.