கத்தாரில் உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி.!

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது‌. இதனை‌ முன்னிட்டு, கத்தாரில் மகளிர்க்கான நிகழ்ச்சியை கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை மகளிர் பிரிவு சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இதில், சிறப்பு பட்டிமன்றம், சிறுவர் சிறுமிகளுக்கான திருக்குறள் போட்டி, பறை இசை, பரதநாட்டியம், காசிகாதேவ் கலைக்குழுவின் பெண்மையை போற்றும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி, இது உங்களுக்கான மேடை எனும் சிறப்பு நிகழ்ச்சி, பெற்றோர்களுக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி, சிறப்பு அழைப்பாளர்களின் சிற்றுரை, குழந்தைகளின் நடன நிகழ்ச்சி, கிராமிய சிறு நாடகம், போன்ற இன்னும் பல தமிழர்களின் கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளாதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாள்‌ : 20-03-2020
நேரம் : மாலை 5 மணி முதல் 9 மணி வரை.
இடம் : IICC கஞ்சனி அரங்கம். (தைசீர் பெட்ரோல் நிலையம் பின்புறம் அல் துமாமா)

மேலும் இந்நிகழ்ச்சியில், அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஆதரவு தருமாறும் கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை சார்பில் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.